Skip to main content

Posts

Showing posts from August, 2022

கொட்டு முரசே

சுதந்திரக் காற்று வீசும் நாட்டின் கல்லூரியில் படிக்கும் மாணவன் வளமான தேசத்தைப் பற்றி எழுதுவது சுவரொட்டிகள் அலங்கரித்த பேருந்துகள் பராமரிப்புக்கு ஏங்கும் உயிர்கள் சத்தம் நிறைந்த வீடுகள் என ஆயிரம் குறைகள் கண்களோடு இருட்டில் வாழும் கிராமத்து வயலின் விவசாயிகள் வேலை தேடும் திறமைசாலிகள்  என அப்பாற்பட்ட மனிதர்கள் ஆனால் இந்தியன் என்ற உணர்வு  அனைவரையும் ஒன்றாக மாற்றுகிறது தேசிய கொடியை மேலும் உயர்த்திய இந்த நாட்டின் அடையாளங்களுக்காகவும் எல்லைகளை குடும்பங்களின் நினைவோடு காத்து இறந்த பின்னரும் தனது குடும்பம் தன் மக்களைக் காக்கும் என்ற புனிதர்களுக்காகவும்  முரசே நீ கொட்டுவாயா??? -  அருண் குமார் முத்தழகன் (என் கல்லூரியில் போட்டிக்காக நான் எழுதிய கவிதை இது.  கவிதையின் முதல் பகுதி தேசியக் கொடியின் மூவர்ணத்தைக் குறிக்கும் மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது.  மேலும் கவிதையின் இரண்டாம் பாகம் வீழ்ச்சியடைந்த அமைப்பு கொண்டது. அந்த பகுதியில் எழுதப்பட்ட பிழைகள் குறைவதை உறுதி செய்வதே அதற்கான காரணம். கவிதையின் மூன்றாம் பகுதி அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.) எனது ஆங்கில க...