கடல் சூழ்ந்த நிலத்தில்
சொந்தம் சூழ வளர்ந்து
புகழ் சூழ இறைவனை
அடைந்த மாமனிதரின் கதை
சிறுவனாக பல நேரம்
அனைவரும் சமம் என்று
தோழர்கள் முதல் ஆசிரியர்கள் வரை
மனிதனாக உயர்ந்து நின்றார்.
வளரும் காலத்தில் விற்ற
செய்தித்தாள்களில் தன்
வெற்றிகளையும் செய்திகளாக
மாற்றி ஊக்கம் அளித்தார்.
இயற்பியல் மாணவராக
விமானங்கள் மீதான ஆசையில்
நூலிழையில் வீழ்ந்த பின்னும்
இராணுவ ஹெலிகாப்டரை உருவாக்கினார்.
செயற்கைக்கோள் தொடங்கி
பொக்ரான் சோதனை வரை
இந்தியாவை உலகளவில்
வல்லரசாக மாற்ற உழைத்தார்
விருதுகள் குவிந்த வண்ணம்
ஒருமனதாக மக்களின்
குடியரசுத் தலைவராக
நேர்மையாக இருந்தார்.
தூக்கம் இல்லாமல் கனவு,
தற்செயல் இல்லாமல் திறமை,
கையொப்பம் இல்லாமல் ஆட்டோகிராப்,
இறப்பு இல்லாமல் சரித்திரம் போல
வாக்கியங்கள் பொன் மொழிகளாய்
மாற முடியும் என்ற நம்பிக்கையில் வரும்
வாக்கியங்களில் கவிதையாய் வாழ்கிறார்
என் பார்வையில் கலாம்
- அருண் குமார் முத்தழகன்
எனது ஆங்கில கவிதை படைப்புகளுக்கு கீழே உள்ள இணையதளத்தைப் பார்வையிடவும்
Comments
Post a Comment